ஒலிம்பிக் விழாவின் சம்பிரதாயபூர்வ நிகழ்வான சுடர் ஏற்றல் கிரேக்கத்தின் ஏதேன்ஸ் நகரில் இடம்பெற்றது.ஒலிம்பிக் சுடரை ஏந்திய குழுவினர் எட்டு நாட்கள் கிரேக்கத்தில் ஊர்வலமாக செல்லவுள்ளனர்.அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி ஒலிம்பிக் சுடர் லண்டனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நவீன ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது ஒலிம்பிக் விழா நடைபெற்ற ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் இங்கிலாந்தில் 70 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஜூலை மாதம் 27 ஆம் திகதி லண்டன் ஒலிம்பிக் போட்டியின் அங்குரார்பண நிகழ்வு நடைபெறவுள்ள பார்க் விளையாட்டரங்கிற்கு ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



