அக்குளுக்குள் உரோமம் வளர்ப்பதன் மூலம் பிரபலமான பெண்! (காணொளி, பட இணைப்பு)


இந்தப் பெண்ணின் வித்தியாசமான செய்கைகளைப் பாருங்கள்.அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் வளர்ந்து இருக்கின்ற அடர்ந்த உரோமங்களை கடந்த 18 மாதங்களாக சிரைக்காமல் வைத்திருக்கின்றமை மூலம் பிரபலம் ஆகி உள்ளார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் Emer O’Toole.இவருக்கு வயது 28. உடலில் வளர்கின்ற உரோமங்களை சிரைக்கின்றமை மூலமே பெண்கள் அழகாகவும், எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் காட்சி கொடுப்பார்கள் என்பது சமுதாயத்தின் கண்ணோட்டமாக உள்ளது.


இதை உடைத்து எறிகின்றமைக்காக அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உரோமங்கள் வளர்வதை அனுமதித்து உள்ளார். பெண்களின் உடலில் வளர்கின்ற உரோமங்கள் கட்டாயம் சிரைக்கப்பட்டே ஆக வேண்டும் என்கிற சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்கு எதிராக கிளம்பி இருக்கின்றார்.


இந்த உலகத்தில் அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உரோமங்களை சிரைக்காமல் இருக்கின்ற பெண் இவர் ஒருவர் மாத்திரமே என்று கூறி விடவே முடியாது. ஆனால் நவீன சமூகத்தில் பெண் ஒருவர் உடலில் உள்ள உரோமங்களை சிரைக்காமல் இருக்கின்றார் என்பது மிகவும் அசாதாரண செயல்.


இவர் முதன்முதல் 14 ஆவது வயதில் உடல் உரோமங்களை சிரைத்து இருக்கின்றார். சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றமைக்காகவே இச்சிரைப்பை மேற்கொள்ள வேண்டி இருந்திருக்கின்றது.


இந்நிலையில் பெண்களின் உடலில் உள்ள உரோமங்களுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம்? என்று ஆராய தொடங்கினார். சமுதாயத்தின் எதிர்பார்ப்பை சவாலாக்கி கடந்த 18 மாதங்களாக அக்குள்கள், கால்கள் ஆகியவற்றில் உள்ள உரோமங்களை சிரைக்காமல் இருந்து வருகின்றார்.


இதனால் இவர் ஆரம்பத்தில் தர்ம சங்கடங்களுக்கு உள்ளான சந்தர்ப்பங்கள் ஏராளம். இவர் பொது இடங்களில் கைகளை உயர்த்த நேர்கின்றபோது ஆட்கள் பலரும் இவரின் அக்குள்களை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்ப்பார்கள். ஆயினும் இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றமைக்கான தைரியம், ஆளுமை, துணிவு ஆகியவற்றை காலப் போக்கில் வளர்த்துக் கொண்டார்.


அக்குள்கள், கால்கள் போன்றவற்றில் வளர்ந்து இருக்கின்ற உரோமங்கள் தற்போது இவருக்கு எந்த அசௌகரியத்தையும் கொடுக்கவில்லை. இவருடைய உரோமங்கள் நிறைந்த அக்குள்கள், கால்கள் பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் ஏனென்றால் அநேக ஆண்கள் உடல் பாகங்களில் உரோமங்களை கொண்டிருக்கின்றார்கள் என்றும் பெண்கள்தான் வித்தியாசமாக பார்க்கின்றனர் என்றும் சொல்கின்றார்.


எப்பவோ ஒரு நாள் இந்த உரோமங்களை சிரைக்க வேண்டி இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கின்ற இவர் எவருடைய நிர்ப்பந்தத்துக்காகவும் இச்சிரைப்பை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார் என்று திட்டவட்டமாக கூறுகின்றார். இவர் Itv இன் மோர்னிங் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டி வழங்கியபோதே இவற்றை எல்லாம் தெரிவித்தார்.


அத்துடன் அக்குள்கள், கால்கள் ஆகியவற்றின் உரோமங்களை சிறிதும் சங்கடப்படாமல் தொலைக்காட்சி நேயர்களுக்கு காண்பித்தார். ஆயினும் இவர் உரோமங்களை சிரைத்தே ஆக வேண்டும் என்று நேயர்களில் 80 சதவீதமானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார்கள்.









Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb