எங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்கோ - அடம்பிடிக்கும் 14 வயசு! (வீடியோ இணைப்பு)

எங்களுக்கு திருமணம் பண்ணி வையுங்க இல்லன்ன நாங்கள் செத்திடுவம் .நஞ்சு போத்தல்களுடன் பதின் ஐந்து வயது பொண்ணு இருபத்தி இரண்டு வயது பையன் -என்ன நடக்குதப்ப உலகத்தில .. கட்டாயம் பாருங்கோ ..காதலர்கள் பாருங்கோ !

தண்ணிக்கு அடியிலும் குத்தாட்டம் போடலாம்! (வீடியோ இணைப்பு)

வேலை வெட்டி இல்லாதவர்களும், ஓடி ஓடி உழைத்தவர்களும் சிறிது நேரம் ஓய்வாக இருப்பதற்கென்று இரவுக்களியாட்ட விடுதிக்கு செல்வார்கள். ஆனால் அங்கு உழைத்த உழைப்பை விடவும் ஓவரா ஆட்டம் போடுவார்கள்.

இவ்வாறு பிரபல்யம் வாய்ந்த இரவுக்களியாட்ட விடுதிகள் நீரிற்கு அடியில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆம், மிகவும் குளிர்ச்சியாகவும், சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் தான் இருக்கும்.


போராளிகளை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கும் வினாக்கொத்துக்கள்!

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இன முரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளி கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந் தனர்.இவ்வாறு சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பல் வேறு இடங்களில் இராணுவத்தின் உயர் பாது காப்புடன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் வகைப்பிரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், இவர்களில் ஒரு தொகுதி யினர் மேலதிக விசாரணைகளின் நிமித்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோரால் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இவர்கள் தவிர்ந்த ஏனையோர் ‘புனர்வாழ்வு’ பெறு வதற்கு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் அரசினால் அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு மையங்களிற்கு அனுப்பப்பட்டதுடன் அவர் கள் கால வரையறை கூறப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் போராளிகள் பாதுகாப்பு அமைச்சினால் விடுதலைக்காக பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னதாக, அவர்களால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 20 பக்கங்களை உடைய ஓர் வினாக்கொத்தினை பூர்த்தி செய் யுமாறு பணிக்கப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளின் உள்ளார்ந்த உணர் வுகளை தூசு தட்டிப்பார்க்கும் ஓர் விசப்பரீட்சைக்கான வினாத்தாளாக இவ் வினாக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ௭ழுத்து மற்றும் கருத்து தவறுகள் மித மிஞ்சியுள்ள தமிழ்க் கொலையுடன் அச்சிடப்பட் டுள்ள இவ்வினாக்கொத்திற்கு அவர்கள் அளிக்கின்ற விடைகளின் அடிப்படையிலேயே, அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான தீர்மானத்தினை பாதுகாப்பு அமைச்சு ௭டுத் துக்கொள்கின்றது.

இத்தீர்மானத்தின் பின்ன தான பரிந்துரையுடனேயே, புனர்வாழ்வு மற் றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சி னால் முன்னாள் போராளிகளின் விடுதலைக் கான அனுமதி வழங்கப்படுவதுடன் அத னைத் தொடர்ந்தே, IOM நிறுவனத்தினரால் அவர்களிற்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதனை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை விநி யோகிக்கப்படுகின்றது.

இவ்வினாக்கொத்தில் பாதுகாப்பு அமைச் சின் ௭திர்பார்ப்பிற்கு மாறாக விடையளிக்கும் நபர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வு ௭ன்ற போர்வையில் தடுத்து வைக்கப்படலாம் ௭ன்ற அச்சத்தில், சங்கடமானதோர் மனநிலையுட னேயே இதனை தாம் பூர்த்தி செய்ததாகவும், இவ்வினாக்கொத்து பூர்த்தி செய்யப்படும் போது தீட்டிய கத்தி மேல் நடப்பது போல் முன்னாள் போராளிகள் தவித்ததாகவும் புனர் வாழ்வின் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, முன் னாள் போராளிகள் விடுதலைக்கு தயாராகி விட்டனரா அல்லது இல்லையா, விடுதலை யின் பின்னதாக சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஏதாயினும் இனத்துவ முரண்பாடுகளை தூண்டும் சாத்தியம் உள்ளதா, அரசிற்கு ௭தி ரான கருத்துக்களை அவர்கள் ஆதரிக்கின் றனரா, அவர்களால் ௭திர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற் படுமா முதலான விடயங்கள் மறைமுகமாக பெறும் வகையிலேயே இவ்வினாக்கொத்தி லுள்ள வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வினாக்கொத்திற்கு அளித்த விடைகளின் அடிப்படையிலேயே, புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போரா ளிகள், தாம் இராணுவத்தினர் மற்றும் இரா ணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு, பின்தொடர்தல், தொடர் விசாரணை, மீளவும் கைது மற்றும் காணாமல் போதல் ௭ன்ப னவற்றிற்கு உட்படுத்தப்படலாம் ௭ன்ற அச் சம் விடுவிக்கப்பட்ட போராளிகள் மத்தியில் காணப்படுகின்றது.

இவ்வகையில், புரிந்து கொள்வதற்கு கடின மானவினாக்களிற்கு விடையளிக்க நிர்ப்பந் திக்கப்படும் முன்னாள் போராளிகள், மிகுந்த உளவியல் குழப்பத்தின் மத்தியிலேயே பதி லளிக்கின்றார்கள்.

அவ்விடைகளின் அடிப் படையிலேயே அவர்களது ௭ண்ணங்களை பாதுகாப்பு அமைச்சு தமக்குரிய தகவல்களாக பெற்றுக்கொள்கின்றது ௭ன விடுதலை செய் யப்பட்ட முன்னாள் போராளிகள் கருதுகின் றனர்.

இவ்வினாக்கொத்தானது முன்னாள் போரா ளிகளின் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயரிற்கு பதிலாக புனர்வாழ்வு மையத்தில் அவரை அடையாளப்படுத்தவென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட குறியீட்டு இலக்கம் மட்டுமே வினவப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வயது, புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள காலம் (புனர்வாழ்வு மையம் ௭ன்னும் பதத்திற்குப் பதிலாக ‘நிறுவனம்’ ௭ன்ற சொற்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது, திருமண நிலை, பிள்ளைகளின் ௭ண்ணிக்கை, தடுப்புக் காவலிற்கு வருமுன்னதாக அவரது தொழில், கல்வி நிலை மற்றும் அவரது பிறந்த இடம் உள்ளடங்கலான 11 வினாக்களிற்கு விடையளிப்பதன் மூலம் போராளிகள் தமது தனிப்பட்ட விபரங்களை இப்பகுதியில் வழங்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து, ஏ (A) தொடக்கம் கே (K) வரை 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 155 வினாக்கள் இவ்வினாக்கொத்தில் கேட்கப்பட்டுள்ளன. விடையளிக்கும் முன்னாள் போராளி ௭வ்வாறு கவனமாக பதிலளித்தாலும் சிக்கலை உருவாக்கக் கூடியவாறான வினாக்கள் இங்கு தொடுக்கப்பட்டுள்ளன.

இவை விடையளிப்பவரை பெரும் உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவதோடு, இவர்களின் ௭திர்கால இருப்பிற்கும் கேள்விக்குறியினை இடுகின்றது.

௭டுத்துக்காட்டாக, A பகுதியில் 11வது வினாவாக கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி, பின்வருமாறு உள்ளது.

‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது ஆயுதக் குழுவான விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களாலேயே ஆகும்.’ இக்கேள்வியானது, அதற்குப் பதிளிக்கும் முன்னாள் போராளியை பெரும் சிக்கலுக்குள் ஆழ்த்தும் தன்மையினதாயுள்ளது.

அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தரை மனதில் வைத்தா, அல்லது அரசாங்க பங்காளிக் கட்சியைச் சேர்ந்த சந்திரகுமாரை மனதில் வைத்தா பதிலளிப்பது ௭ன தத்தளிக்கும் நிலைக்கு தள்ள முயற்சிப்பதாயுள்ளது.

மேலும், யு பகுதியில் 33 வதாக கேட்கப்பட்டுள்ள வினா பின்வருமாறு உள்ளது.

’௭வ்வாறான வலிமையையும் பிரயோகிக்க மறுப்பவர் அடிமைகளே‘. இங்கு, இக்கருத்தினை விடையளிப்பவர் ஆதரிப்பின் அவர் தன்னை ஓர் அடிமையாக உணர்வார். ஆதரிக்கவில்லையாயின், அவர் போராட்டத்திற்கு தயாராகின்றாரா ௭ன்ற சந்தேகம் ௭ழும்.

இவ்வாறு, பதிலளிப்பதற்கு சிக்கலான வினாக்களின் ௭ண்ணிக்கை இவ்வினாக்கொத்தில் நீள்கின்றன.

சரணடைந்த முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து, அவர்களை தத்தமது குடும்பங்களோடு மீளிணைத்து சமூகத்தில் அவர்கள் சாதாரண பிரஜைகளாக வாழ்வதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக விளம்பரம் செய்து கொள்ளும் இலங்கை அரசாங்கம், உண்மையில் சரணடைந்த போராளிகளிற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும், விடு தலை செய்யப்பட்டதன் பின்னதாகவும் தொடர்ச்சியான உளவியல் நெருக்கடி யினையும், அவர்களின் சாதாரண வாழ்க் கையில் தாக்கத்தினையும் அவர்களின் இருப் பிற்கு அச்சுறுத்தலினையும் கொடுத்து வரு கின்றது.

முன்னாள் போராளிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட சூழ்ச்சி நிறைந்த கையாள்கையை பகிரங்கப்படுத்தும் நோக்கிலேயே இவ் வாய்வுக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. இக் கேள்விக்கொத்தின் மீதான ஆழமான பார்வை அடுத்த வாரங்களில் தொடரும்.

தனது உயரத்தால் கைநழுவும் வாய்ப்புக்களை தக்க வைக்க முடியாது தவிக்கும் ரிச்சா!

நடிகை ரிச்சா கங்கோத்பாயின் உயரத்தாலும் அதிக சம்பளம் கேட்கும் பிரச்னையாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் வேறு நடிகைககளுக்குச் செல்கின்றன.போட்டி நடிகர்கள் சிம்பு, தனுஷுடன் ‘ஒஸ்தி’, ‘மயக்கம் என்ன’ படங்களில் ஒரேநேரத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். ஆனால் அப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.ஆனாலும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க அவருடன் ஒரு சில இயக்குனர்கள் பேசி வருகின்றனர். ‘ஒஸ்தி’ படத்திலேயே சோனம் கபூர், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக முதலில் பேச்சு எழுந்தது. இறுதியாகத்தான் ரிச்சா ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் விஷால் நடிக்க சுந்தர்.சி இயக்கும் படத்தில் கார்த்திகா நடிப்பதாக இருந்தது. அவர் திடீரென்று விலகியதால் அந்த வாய்ப்பு தற்போது ரிச்சாவுக்கு சென்றிருக்கிறது. ஆர்யா, அஜீத் படங்களிலும் நடிப்பதுபற்றி அவரிடம் பேச்சு நடப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.ஆனாலும் புதுமுக இயக்குனர்கள் ரிச்சா கேட்கும் அதிகப்படியான சம்பளத்தை கேட்டு அவர் பக்கம் செல்ல தயங்குகிறார்கள். இன்னும் சில இயக்குனர்கள் ஹீரோக்களைவிட ரிச்சா அதிக உயரம் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கின்றனர்.இந்நிலையில் இந்தியில் ‘ஷார்ட்கட் ரோமியோ’ என்றபடத்தில் ரிச்சா நடிப்பதாக கூறப்பட்டது. அந்த வாய்ப்பும் இப்போது கால்ஷீட் பிரச்னையால் கைநழுவி விட்டது.

மைக்கல் ஜாக்சனுக்கு நிகராக மாறிய அதிசய இளைஞன்! (வீடியோ இணைப்பு)

உலக புகழ்பெற்ற பாப் பாடகி M.I.A (மாயா அருள்பிரகாசம்) இன் ஆரம்பகால இசைப்பயணத்தில் 'குடுரோவின் ஓசை' (Sound of Kuduro) என பெயரிடப்பட்ட இப்பாடலை DJ Znobia வுடன் இணைந்து Buraka Som Sitema வின் இசை ஆல்பத்திற்காக பாடியிருப்பார்.அங்கோலாவில் 2007ம் ஆண்டு படம்பிடிக்கப்பட்ட இந்த பாடலுக்கான இசை வீடியோ இன்று வரை பேஸ்புக்கின் ஆபிரிக்க நண்பர்களிடையே அடிக்கடி பகிரப்படுகிறது.

இந்தப்பாடலின் இசையும், வீடியோவில் தோன்றும் மக்களின் ஒவ்வொரு நடனமும், அங்கோலா முழுவதும் மைக்கெல் ஜேக்சன்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும்.தமிழ்நாட்டில் M.I.A உருவாக்கிய Bird Flu பாடல் எப்படி அதன் குத்து இசைக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமோ, அதே போன்று இந்த பாடலும் ஐரோப்பியர்களிடையே பெரிதும் கவனத்தை பெற்றது.


சிங்களத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்திய புதிய ஆதாரங்கள்! (வீடியோ இணைப்பு)

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆதாரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்திருந்தன.இவ்வாறு வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அரச தரப்பை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையை தோற்றுவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக மேலும் சில ஆதாரப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதன் உச்சகட்டமாக இறுதி யுத்தத்தில் போதிய மருத்துவ வசதியின்றி பிரசவித்த பிரசவ நிகழ்வையும் வீடியோ பிடித்த தனது மிருகக் குணத்த்தை அம்பலப்படுத்தியுள்ளது.


இணையத்தில் பட்டையைக் கிளப்புகின்றது ஒபாமாவின் புதிய வீடியோ! (வீடியோ இணைப்பு)

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாடிய 'Call Me Maybe' இசைப்பாடல் யூடியூப்பில் 8 மில்லியன் ஹிட்ஸ் கடந்து வலம் வரத் தொடங்கியுள்ளது. 2012 இன் சூப்பர் ஹிட்ஸ் கோடைவிடுமுறை பாடல் என புதிய பட்டமும் கொடுக்கிறார்கள். அமெரிக்க டென்னெஸே பல்கலைக்கழகத்தின் ஃபாடி சாலே (Fadi Saleh) எனும் மாணவன் தனது கடந்த வருட கோடைவிடுமுறையில் இந்த பாடலையும் மேலும் சில ஒபாமாவின் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.அதாவது ஒபாமா பொது இடங்களில் நிகழ்த்தும் அரசியல் பேச்சுக்களின் சில சொற்களை மட்டும் பிரித்தெடுத்து, புத்திசாலித்தனமான எடிட்டிங் மூலம் ஒபாமாவே புதிய பாடல் பாடுவதாக அவர் வடிவமைத்துள்ளார். சாலேவின் Barackdubs எனும் யூடியூப் சேனலும் தற்போது மெகா பிரபலமடைந்துள்ளது.

பிரபல இசைப்பாடகர்கள் Rihana, Lady Gaga, Rae Jepson ஆகியோரின் ஆல்பங்களில் வெளிவந்த இசைப்பாடல்களை ஒபாமா பாடுவதாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க வெள்ளை மாளை யூடியூப் சேனைலிருந்து ஒபாமா உரையாற்றும் அனைத்து காட்சிகளையும் எடுத்துள்ளார்.இது களிப்பூட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்திற்காகவும் இதனை செய்யவில்லை எனும் ஃபாடி சாலேஹ், இதே போன்று குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளர் மிட் ரூம்னியின் உரைகளை வைத்தும் உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார்.



வெளிநாட்டு இணையத்தளங்களை குறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை!

வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஆவ நேரடியாக வழங்கியுள்ளார்.கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.

சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார்.அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா வாகிஸ்ராவிடமும் இணைய ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களைத் தயாரித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இணையத் தளங்களுடன் தொடர்புடைய பெருமளவானோரின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றுவோரே இணையத் தளங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிப் பெண்கள் மீது ஜல்சா செய்துவந்த டாக்டர் சிக்கினார்! (படங்கள் இணைப்பு)

இத்தாலியில், உள்ள மருத்துவர் ஒருவர் தம்மிடம் வரும், பெண் நோயாளிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். பல நாள் கள்வன் ஒரு நாள் மாட்டுவான் என்று சொல்லுவார்கள் அல்லவா ? இதேபோல இத்தாலியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, பெண் நோயாளியாக நடிக்க ஒருவரை அனுப்பியுள்ளது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது அப்பெண்ணிடம் சிறிய ரக கமராவையும் கொடுத்துவிட்டுள்ளார்கள். வழமைபோல நோயாளியை பரிசோதிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் கூறி அவரை படுக்கவைத்துள்ளார். அப்பெண்ணின் மேலாடைகளை களற்றி பின்னர், மார்பகங்களில் முத்தமிட முனைந்துள்ளார். இதனை அடுத்து அப்பெண் அவரிடம் இருந்து தப்ப முயற்சித்துள்ளார்.

அவர் கொண்டுசென்ற சிறியரகக் கமராவை, அவர் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தவேளை தான் அப்பெண் ஒரு நோயாளி அல்ல ஒரு நிருபர் என்பது டாக்டருக்குத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட டாக்டர் கடுங்கோபம் கொண்டு, அப்பெண்ணையும், தொலைக்காட்சிக்கு புகைப்படம் எடுக்கும் நபர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனையும் அந் நிருபர்கள் படம் எடுக்கத் தவறவில்லை. இச் செய்தி வெளியானதால் இத்தாலியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. குறிப்பிட்ட மருத்துவரை வேலையில் இருந்து நீக்கவேண்டும் என பெண்கள் அமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.







வன்னிச் சமர்க்களத்தில் கொடுமைப்படுத்தப்பட்ட போராளிகள்! (படங்கள் இணைப்பு)

வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் அரச சிங்கள படைகளினால் கைது செய்யப்பட்டு  கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளின் அதிர்ச்சி படங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன.

படங்கள் வருமாறு:










கண்களற்ற நிலையில் பிறந்த குழந்தை! (படங்கள் இணைப்பு)

இரு விழிகளும் அற்ற நிலையில் பிறந்த குழந்தையொன்று சீனாவின் உருமுக் பகுதியில் வளர்ந்து வருகிறது.மரவன்ஜீன் என்றழைக்கப்படும் இக்குழந்தையே இவ்வாறு விழிகளற்ற நிலையில் பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு தற்போது வயது 8 மாதங்களே ஆகின்றன.முகத்திற்கு ஒளியை காண்பிக்கும்போது அக்குழந்தை சிரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அக்குழந்தைக்கு இடது கண் இருக்கலாமென நம்பப்படுகின்றது.

குழந்தையை பெற்றோர்கள் கிராமத்து வைத்தியசாலைக்கு  அழைத்துச் சென்றபோது குழந்தைக்கு இடது புற கண் இருப்பதாகவும் ஆனால் அது தோல்பகுதியினால் மறைக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.'அவன் ஒளியை பார்க்க ஆவலாக உள்ளான். பிரார்த்தனையில் ஈடுபட்டால் அவனால் ஒளியை பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் நாங்கள் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றோம்' என்று அக்குழைந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இக்குழந்தையின் கண்ணில் கண்வில்லை இல்லையென வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இக்குழந்தை சத்திர சிகிச்சைக்கு பொறுத்தமற்றது எனவும் 16 வயதை அடைந்த பின்னர் செயற்கை கண் பொருத்துவது சிறப்பானதாக அமையுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.







உலகக்கிண்ண காற்பந்து முடிவுகளைக் கூறத்தயாராகும் யானை சிட்டா!

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியை பால் என்ற ஆக்டோபஸ் கணித்தது போன்று, யூரோ கால்பந்தாட்ட போட்டிகளை சிட்டா என்ற யானை கணித்துக் கூற உள்ளது.போலந்து மிருக காட்சி சாலையில் சிட்டா என்ற யானை உள்ளது.யூரோ கால்பந்தாட்ட போட்டிகளில் தொடக்க ஆட்டமாக இன்று போலந்து - கிரீஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் போலந்து அணி வெற்றி பெறும் என சிட்டா கணித்து கூறியுள்ளது. சிட்டா முன்பு வைக்கப்பட்ட 3 பழங்களில் போலந்து அணி போர்டு முன் வைக்கப்பட்ட பழத்தையே அது எடுத்துள்ளது.சிட்டாவின் கணிப்பு எந்த அளவுக்கு பலிக்கிறது என்பது வெற்றி, தோல்வியை வைத்து தெரிந்து விடும்.

தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு முன்னால் தவிடுபொடியாகும் மஹிந்த சிந்தனை!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் முதன்முதலாக ஜனாதிபதி பதவிக்கு வந்து சில வருடங்களின் பின்னர் அறிமுகம் செய்த மகிந்தவின் சிந்தனைகள் இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கின்றன.தனது சிந்தனைகன் தூக்கத்தை தழுவிக் கொண்டிருந்தாலும் அவர் மட்டும் இலங்கையில் தங்குவதிலும் பார்க்க அதிகமாக வெளிநாடுகளுக்கு பறப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார் என்பதை நாம் செய்திகள் மூலமாக அறிகின்றோம்.சுமார் 7 வருடங்களுக்கு முன்பு, 2005ம் ஆண்டு, இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது மகிந்த ராஜபக்ச மேற்படி தேர்தலில் தான் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக தமிழர்களின் வாக்குக்களை வென்றெடுக்கும் நோக்கோடு, தமக்கு சாதகமாக பலமான சக்தியொன்றை தேடிக்கொண்டிருந்தார்.

அவர் அந்த வேளையில் பலமான சக்தி ஒன்றை நாடிச் சென்ற நோக்கம் அப்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் ஒரு “வெறியாகவே விளங்கியது. ஆமாம் 2005 ம் ஆண்டு தமிழர் பக்கத்தில் பலமான ஒரு அரசியல் சக்தியாக விளங்கிய ஒரு அமைப்பின் ஆசிர்வாதத்தால் மகிந்த ராஜபக்ச சுமார் 48,90, 000 வாக்குகளைப் பெற்று வெற்றியை தழுவினார்.இரண்டாவது இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க சுமார் 47,00,000 வாக்குகளைப் பெற்றார். பெரும்பாலான தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறவில்லையே என்ற கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்த வேளையில்தான் மகிந்தவிற்கு மறைமுகமான ஆதரவை வழங்கிய மேற்படி பலமான சக்தியின் தலைவராக விளங்கியவர் தனது நண்பர்களுக்கு கூறினாராம்.

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்தால் நமக்கு ஒன்றுமே செய்யமாட்டார். அதேவேளையில் வெளி உலகத்தோடு முக்கியமாக மேற்குலக நாடுகளோடு நட்புறவை பேணியபடி தனது காய்களை நகர்த்திச் செல்வார்.ஆனால் மகிந்தவோ ஜனாதிபதியாக வந்தால் தன்னிடம் கேள்வி கேட்கும் மேற்குலக நாடுகளிடம் கேள்விகள் கேட்டு விவாதத்திற்குப் போவார். அவ்வாறு விவாதங்கள் நடக்கும்போது அந்தந்த நாடுகளின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வார்.அவ்வாறு மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளோடு விரோத்தை சம்பாதிக்கின்ற போதுதான் அந்த நாடுகள் நமது ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொள்பவையாக இருக்கும். காலப்போக்கில் மகிந்த ராஜபக்ச உலகின் பெரும்பாலான நாடுகளோடு பகையை வளர்த்துக்கொண்ட ஒரு பேர்வழியாக மாறிவிடுவார்.இது எமது தமிழ் இனத்திற்கு சாதகமான ஒரு அரசியல் நிலை என்றே கூறுவேன். இவ்வாறு கூறுவாராம் அந்தத் தலைவர். நாம் இந்த கூற்றை ஆழமாக படிப்போமானால் இனிமேல் சில உண்மைகள் விளங்கும்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு இயல்பாகவே உள்ள கோபம், பொறாமை போன்ற விரும்பத்தகாத குணாம்சங்களால் அவர்தம் செல்வாக்கு உலகின் பல பாகங்களிலும் வீழ்ச்சியடைகின்றதைப் பார்க்கின்றோம்.இவ்வாறு மகிந்த என்னும் ஒரு நபர் உலகின் பல நாடுகளினால் “விலக்கப்பட வேண்டிய நபர்” என்ற பார்வையில் பார்க்கப்படுவார். அல்லது பதவியிலிருந்து விலக்கப்படுவார் என்ற நம்பிக்கை மறுபக்கத்தின் தலைவருக்கு இருந்துள்ளது வியக்கத்தக்க ஒரு உண்மையாகும். ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிராக இந்த வாரத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அவரின் அரசியல் முடியும் காலத்திற்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்தக்கள் மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் பதற்றத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில்,

புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அவரின் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதும் உகந்த விடயங்களாக எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வகையில் இந்த நிலைமையை தடுத்திருக்க இங்கிலாந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு முடியாமல் போனமை குறித்து கவலை அடைகின்றோம்” என்றும் அவதிப்படுவதை நாம் செய்திகள் மூலமாகப் பார்க்கின்றோம்.இவ்வாறான சம்பவங்களை நாம் உற்று நோக்குகையில், தமிழர் தரப்பின் பலமான சக்தியின் தலைவரின் தீர்க்கதரிசனமான சில சிந்தனைகள் மகிந்தவை ஒரு அழியும் நிலைக்கே தள்ளப்பார்க்கின்றன என்று நாம் துணிந்து கூறலாம்.

மகிந்தவின் சிந்தனைகள் வெறும் வெற்றுத் தாளில் எழுதப்பட்ட எழுத்துக்களாகவே உள்ளன. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் தமிழர் தரப்பின் பலமான சக்தியின் தலைவர் மகிந்தவின் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என்று சிந்தனை செய்து பல விடயங்களை இரகசியமாக செய்தமை பாராட்டுக்குரியவையாகும்.தோல்வியின் நாயகனாக தற்போது மாறி வரும் மகிந்த பற்றி சிந்தனை செய்தவை தற்போது நிதர்சனமாக நடக்கும் சம்பவங்களாகவே உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்வாறு நாம் பார்க்கும் போது நாம் மேற்குறிப்பிட்ட தமிழர் தரப்பின் பலமான சக்தியாக விளங்கிய பிரபாகரன் சிந்தனைகள், மகிந்தவின் சிந்தனைகளை தோற்கடிக்கும் ஒரு காலம் வரும்போது அது நமது தமிழினத்தின் விடிவிற்கான மணியோசை என்றே நாம் கருத வேண்டும்.

கனடா உதயன் கதிரோட்டம்
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb