நடிகை ரிச்சா கங்கோத்பாயின் உயரத்தாலும் அதிக சம்பளம் கேட்கும் பிரச்னையாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் வேறு நடிகைககளுக்குச் செல்கின்றன.போட்டி நடிகர்கள் சிம்பு, தனுஷுடன் ‘ஒஸ்தி’, ‘மயக்கம் என்ன’ படங்களில் ஒரேநேரத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். ஆனால் அப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.ஆனாலும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க அவருடன் ஒரு சில இயக்குனர்கள் பேசி வருகின்றனர். ‘ஒஸ்தி’ படத்திலேயே சோனம் கபூர், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக முதலில் பேச்சு எழுந்தது. இறுதியாகத்தான் ரிச்சா ஒப்பந்தம் ஆனார்.
இந்நிலையில் விஷால் நடிக்க சுந்தர்.சி இயக்கும் படத்தில் கார்த்திகா நடிப்பதாக இருந்தது. அவர் திடீரென்று விலகியதால் அந்த வாய்ப்பு தற்போது ரிச்சாவுக்கு சென்றிருக்கிறது. ஆர்யா, அஜீத் படங்களிலும் நடிப்பதுபற்றி அவரிடம் பேச்சு நடப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.ஆனாலும் புதுமுக இயக்குனர்கள் ரிச்சா கேட்கும் அதிகப்படியான சம்பளத்தை கேட்டு அவர் பக்கம் செல்ல தயங்குகிறார்கள். இன்னும் சில இயக்குனர்கள் ஹீரோக்களைவிட ரிச்சா அதிக உயரம் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கின்றனர்.இந்நிலையில் இந்தியில் ‘ஷார்ட்கட் ரோமியோ’ என்றபடத்தில் ரிச்சா நடிப்பதாக கூறப்பட்டது. அந்த வாய்ப்பும் இப்போது கால்ஷீட் பிரச்னையால் கைநழுவி விட்டது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து