நனவாகியது ஸ்டீவ் ஜொப்ஸின் கனவு! (வீடியோ, படங்கள் இணைப்பு)


மறைந்த ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், தான் வாழும் காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கொண்ட ஐ-கார் ஒன்றை வடிவமைக்க விரும்பினார்.அவரது கனவை நினைவாக்கும் முயற்சியாக, “ஐ-மூவ்” என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரை இத்தாலிய வடிவமைப்பாளர் லிவியூ டூடோரன் உருவாக்கியுள்ளார்.இது, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத இலத்திரனியல் கார் ஆகும்.


ஆப்பிள் சாதனங்கள் மூலம் ஒருங்கிணைந்த வசதிகளை பெறும் வகையில் ஐ-மூவ் வடிவமைக்கப்பட்டுள்ளது.கார் முழுவதும் ஒளி ஊடுருவும் வகையில் பெரும்பாலான பகுதிகளை கண்ணாடி ஆக்கிரமித்துள்ளது.மேலும், காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்தை பெற முடியும். 3 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த காரில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான இடவசதியும் உண்டு.வாடிக்கையாளர் விருப்பத்திற்கு தக்கவாறு இந்த காரில் ஏராளமான வசதிகளை பெறுவதோடு, கஸ்டமைஸ் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் லிவியூ டூடோரன் தெரிவித்துள்ளார்.


ஸ்டீவ் ஜாப்ஸ் கனவை நனவாக்கும் வடிவமைப்பு கொண்ட கார்கள் வரும் 2020ம் ஆண்டு முதல் மார்க்கெட்டிற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb