மக்களை திசை திருப்ப இடம்பெற்ற இராணுவ சாகசங்கள்! (படங்கள், வீடியோ இணைப்பு)

மறக்கவும், மன்னிக்கவும் முடியாத பல போர்க்குற்றங்களை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தி்ல் மண் கவ்விய நிலையில் யாழில் மிகப் பிரமாண்டமான முறையில் தனது இராணுவத்தினரைக் கொண்டு சாகச நிகழ்வினை செய்து காட்டியுள்ளது.



வன்னிப் போரில் இலங்கை இராணுவத்தினரின் கீழ்த்தரமான செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் சர்வதேசத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை மூடிமறைப்பதற்காக யாழில் சாகச நிகழ்வு நடைபெற்றுள்ளது. பலாலி இராணுவத் தலமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வு பராசூட்டில் இருந்து தரையிறங்குதல், இராணுவ அணிவகுப்பு மரியாதை, மோட்டார் சைக்கிள் சாகசம், நாய்களின் சாகசம் என்பன நடைபெற்றது.


இந்த இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இராணுவ வீரர்கள் நிகழ்திய சாகசங்களை பார்வையிட்டுள்ளார்.




 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb