இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் தேர்த் திருவிழாவில் தென்னிந்திய பிரபல நடிகர் அருண்பாண்டியன் கலந்துகொண்டார்.மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட அருண்பாண்டியன் ஊமைவிழிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ரிசி புலனாய்வுத்துறை, தேவர், திருப்பதி, விகடன், இணைந்தகைகள்; விருதகிரி உள்ளிட்ட திரைப்படங்களில் அருண்பாண்டியன்; நடித்துள்ளார்.தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டாத அருண்பாண்டியன் தயாரிப்புத்தறையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மற்றும் ஐங்கரன் கருணா லண்டனில் சினிமா ஸ்தாபனங்களை நடத்தி வருகிறார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



